கரூர்: மணல்மேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில்,தலைமையாசிரியர்களுக்கான தலைமை பயிற்சி முகாம் நடந்தது.
கரூர் மணல்மேடு என்.எஸ்.என்., பொறியியல் கல்லூரியில்,அனைவருக்கும் இடை நிலைக்கல்வி சார்பில் தலைமைப் பண்பு பயிற்சி முகாம் நடந்தது. இதில்,முதன்மைக்கல்வி அலுவலர் ராமசாமி தலைமை வகித்தார். இங்கு, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 30 பேருக்கு, 10 நாட்கள் பயிற்சி நடக்கிறது.
விழாவில், மாவட்ட கல்வி அலுவலர் தங்கவேல், மாவட்ட திட்ட அலுவலர் கனகராஜ், பயிற்சியின் முதன்மை நிலை கருத்தாளர் தலைமையாசிரியர் பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment