ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரத்தில், மாணவ, மாணவியருக்கு, ஆதார் அட்டைக்காக, புகைப்படம் எடுக்கப்படுகிறது.
பள்ளி மாணவ மாணவியர், அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற, ஆதார் அட்டை அவசியமாக உள்ளது. மேட்டூர் தாலுகாவில், ஆதார் அட்டை பெற தவறிய மாணவ,மாணவியருக்கு, புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாம், அந்தந்த ஒன்றியங்களில் நடக்கிறது.
நங்கவள்ளி ஒன்றிய, மாணவ, மாணவியருக்கு, ஜலகண்டாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்,படம் எடுக்கப்படுகிறது. கடந்த, 16ம் தேதி துவங்கிய முகாம், செப்., 10ம் தேதி வரை நடக்கிறது
0 comments:
Post a Comment