ஆப்-லைனில் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு!




கோவை: பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை,ஆப்-லைனில் நடத்துவதற்குஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்துஆன்-லைனில் நடத்தகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாகஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்ஆன்-லைன் முறையில் நடத்தப்பட்ட நிலையில்பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வைஆப்-லைன் வாயிலாக,நடத்துவதாககல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும், 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கவிண்ணப்பித்துள்ளதால் இரண்டு நாட்கள் வரைகூடுதல் கால அவகாசம் தேவைப்படும் என்ற நிலையில்ஆப்-லைன் வாயிலாககவுன்சிலிங் நடத்துவதாககல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்-லைன் வாயிலாககலந்தாய்வு நடத்தப்படும் பட்சத்தில்மற்ற மாவட்டங்களில் உள்ள காலி பணியிட வாய்ப்புகளை அறிந்துகொள்ள முடியும்ஆப்-லைன் முறையில்கலந்தாய்வு நடத்தப்பட்டால்,குறிப்பிட்ட ஒரு மாவட்டத்துக்குள் உள்ள பணியிட வாய்ப்புகளை மட்டுமே அறிந்துகொள்ள முடியும்;மற்ற மாவட்டங்களில் இடமாறுதல் பெற விரும்புவோர்அந்தந்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று,கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில தலைவர் இளங்கோவன் கூறியதாவது:
வரும் 3ம் தேதிபட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட பகுதிகளுக்குள்இடமாறுதல் என்பதுஆப்-லைனில்நடப்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆனால், 4ம் தேதிவெளிமாவட்டங்களுக்கான இடமாறுதலைஆப்-லைனில் நடத்தினால்ஆசிரியர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்மற்ற மாவட்டங்களில் உள்ள காலி பணியிடங்களை அறிந்துகொள்ள முடியாது. இதில்தவறுகள் நடக்கவும் வாய்ப்புள்ளது.
பள்ளி கல்வித்துறை இயக்குனரிடமும்இதுபற்றி பேசினோம். தொடர்ந்து, 3ம் தேதி மாவட்டத்துக்குள் நடக்கவுள்ள ஆசிரியர் கலந்தாய்வை ஆப்-லைனில் நடத்தவும், 4ம் தேதி நடக்க உள்ள வெளிமாவட்டங்களுக்கான பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வைஆன்-லைனில் நடத்தி கொள்ளவும்,கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இவ்வாறுஇளங்கோவன் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment