இன்ஜி., கல்லூரிகளில் பிளஸ் 1 வகுப்பு; பேராசிரியர்கள் முடிவு


இன்ஜி., கல்லூரிகளில் பிளஸ் 1 வகுப்பு; பேராசிரியர்கள் முடிவு

இன்ஜி.கல்லுாரிகள் இன்று திறக்கப்படும் நிலையில்முதல் ஒரு வாரத்திற்கு பிளஸ் 1 பாடங்களை நடத்தபேராசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
அண்ணா பல்கலையின் சென்னை கிண்டி இன்ஜி.கல்லுாரிகுரோம்பேட்டை இன்ஜி.கல்லுாரிஅழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் மாவட்டங்களில் உள்ள பல்கலையின், 13 உறுப்பு இன்ஜி.,கல்லுாரிகள்இன்று திறக்கப்பட உள்ளன.
புதிய மாணவர்களுக்குபல்கலையின் மூத்த மாணவர்கள் வரவேற்பு அளிக்க உள்ளனர். &'ராகிங்ஈவ்-டீசிங்&' போன்ற பிரச்னைகளை தடுக்கசீனியர்ஜூனியர் மாணவர்களின் பிரதிநிதிகளை கொண்ட குழுக்கள்பேராசிரியர்கள் தலைமையில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் ஒரு வாரத்திற்கு அனைத்து பிரிவு மாணவர்களுக்கும்பிளஸ் 1 பாடங்களை நடத்தபேராசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து அண்ணா பல்கலை பேராசிரியர்கள் கூறியதாவது:
பிளஸ் 2 பொதுத்தேர்வில்அதிக மதிப்பெண் பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள்,அண்ணா பல்கலையின் கல்லுாரிகளை தேர்வு செய்துள்ளனர். இவர்களில் தனியார் பள்ளி மாணவர்களே அதிகம். தனியார் பள்ளிகளில்பிளஸ் 1 வகுப்பில்பிளஸ் 2 பாடங்களே எடுக்கப்பட்டுள்ளது. அதனால்பெரும்பாலான மாணவர்களுக்கு பிளஸ் 1 கணிதம்இயற்பியல்,வேதியியல் போன்ற பாடங்கள் தெரியவில்லை.
இன்ஜினியரிங்கை பொறுத்தவரைமுதலாம் ஆண்டில் பெரும்பாலும் பிளஸ் 1 பாடங்களே அதிக அளவில் வரும். முதல் செமஸ்டரில் இடம் பெறும் பல பாடங்கள்பிளஸ் 1 சார்ந்தவை. எனவேஒரு வாரத்திற்கு புதிய மாணவர்களுக்குபிளஸ் 1 பாடங்களை நடத்த உள்ளோம். அதன்பின்பிளஸ் 2பாடங்கள் ரிவிஷன் செய்யப்பட்டுஇன்ஜி.பாடங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


0 comments:

Post a Comment