ஊட்டி: ஊட்டி அரசு கலைக்கல்லுாரியில், 2016--2017ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, 31ல் நடக்கிறது.
கல்லுாரி முதல்வர் முனை வர். சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஊட்டி அரசு கலைக் கல்லுாரியில், 2016--2017ம் கல்வியாண்டில் முதுகலை, முதுநிலை அறிவியல் மற்றும் முதுநிலை வணிகவியல் (எம்.ஏ.,எம்.எஸ்.சி., மற்றும் எம்.காம்.,) பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு, மதிப்பெண் மற்றும் இன அடிப்படையில், இம்மாதம், 31ம் தேதி காலை, 10:00மணியளவில் கல்லுாரி வளாகத்தில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
மாணவர்கள் உரிய ஆவணங்களுடன், பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு, சுந்தரவல்லி கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment